மாதகல் பாணாவெட்டி அம்மன் எழுந்தருளி வீற்றிருக்கும் தேவஸ்தானத்தில் பெரும் நிதி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெற்றுவருகின்றது..!

மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன் அழகாக காட்சியளிக்கிறது. 

அடுத்த ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடாத்த திட்டமிட்டுள்ளார்கள். பின்னர் வழமை போல மகோற்சவம் மார்ச் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெறவுள்ளது.


இந்த திவ்ய திருப்பணி வேலைகள் செம்மையுற நிறைவு பெறுவதற்கு இன்னும் பெருமளவு நிதி தேவைப்பாடாக உள்ளது. அம்பாளின் அடியவர்களான நீங்கள் உங்களால் முடிந்த நிதியினை ஆலய தர்மகர்த்தா சபையினரிடம் வாரி வழங்கி அம்பாளின் சந்நிதான திருப்பணி வேலைகள் தடையின்றி நடைபெற உதவுங்கள். 


''அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்


 மாதகல் பாணாவெட்டி ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம் MATHAGAL PANAVEDDY SRIPUVANESWARI AMBAL TEMPLE பதிவு இல. : HA / 5 / JA/ 527 அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அடியார்களே! 


நிலத்திலும், புலத்திலும் வாழும் கொடை உள்ளம் படைத்த அம்மன் அடியார்களின் நிதிப்பங்களிப்புடன் அம்மன் புனர்நிர்மான கட்டுமானப்பணிகள் 90% வீதம் நிறைவேறி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் மிகுதியாக உள்ள பணிகளான கோவில் திருப்பணி வேலைகள் பெயின்ட் அடித்தல் , பெயின்ட் வாங்குவதற்கான பணம் தேவையாக உள்ளது. 

புதிதாக நிறைவு செய்ய வேண்டி இருப்பதால் எம் ஊரிலும், வெளிநாடுகளிலும் வாழும் பெருமனம் படைத்த அம்மன் அடியார்கள் நிதிப் பங்களிப்பு செய்து அம்மனின் திருக்குட முழுக்கு சிறப்புடன் நடந்து வழமை போல திருவிழாக்களும் மூன்று வேளை நித்திய பூசைகளும் நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடனும் பணிவுடனும் வேண்டி நிற்கின்றோம். 


0094773605041 (Viber வசதியும் உண்டு) 

தொடர்புகளுக்கு : 009477 3605041 

அடை, அட். இல. : 821313007 V 

வங்கி இல. : National Saving Bank (NSB) Saving Account 

இல. : 107250130621 

இங்ஙனம், 

ஆலய தர்மகர்த்தா வை. சிவசுப்பிரமணியம் சிவகணேஸ்












































































 https://www.mathagal.net/2024/08/PaanavaddyAmman.html

கருத்துகள்